India
“குஜராத் மாடலா?.. வெள்ளைத்துணி மாடலா?” : சர்வதேச தலைவர்களை ஏமாற்ற பா.ஜ.க அரசின் மாய்மாலங்கள்!
இந்தியா வரும் சர்வதேச தலைவர்களின் பார்வையில் குடிசைப் பகுதிகள் படாமல் மறைப்பதற்காக சுவர்கள் எழுப்புவதும் திரை கொண்டு மறைப்பதும் குஜராத் மாநில பா.ஜ.க அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது.
முன்னதாக, முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்காக, குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்துக்கு அருகே இருக்கும் குடிசைவாரிய குடியிருப்பு பகுதிகளை சுவர்களை எழுப்பி மறைத்தனர்.
கடந்தாண்டு தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு மோடி சென்றபோது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வரும் மக்கள் அங்குள்ள குடிசைகளை பார்த்து முகம் சுழித்துவிடக்கூடாது என்பதற்காக, குஜராத் அரசு இரும்புத்திரை, துணிகளை வைத்து குடிசைகளை மறைத்தது.
இந்நிலையில், இந்தியா - பிரிட்டன் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். லண்டனில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திற்கு நேற்று அவர் வந்தார்.
இந்தியா வந்த பிரிட்டன் பிரதமரை குஜராத் ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் வரவேற்றனர். குஜராத்துக்கு பிரிட்டன் பிரதமர் ஒருவர் வருகை தருவது இதுவே முதல்முறை.
குஜராத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் மேற்கொண்டபோது, சாலையின் இருபுறமும் வெள்ளைத் துணிகளைக் கொண்டு குடிசை பகுதிகள் மறைக்கப்பட்டன.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் முன்வைக்கப்படும் ‘குஜராத் மாடல்’ இதுதானா என சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!