India
“குஜராத் மாடலா?.. வெள்ளைத்துணி மாடலா?” : சர்வதேச தலைவர்களை ஏமாற்ற பா.ஜ.க அரசின் மாய்மாலங்கள்!
இந்தியா வரும் சர்வதேச தலைவர்களின் பார்வையில் குடிசைப் பகுதிகள் படாமல் மறைப்பதற்காக சுவர்கள் எழுப்புவதும் திரை கொண்டு மறைப்பதும் குஜராத் மாநில பா.ஜ.க அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது.
முன்னதாக, முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்காக, குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்துக்கு அருகே இருக்கும் குடிசைவாரிய குடியிருப்பு பகுதிகளை சுவர்களை எழுப்பி மறைத்தனர்.
கடந்தாண்டு தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு மோடி சென்றபோது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வரும் மக்கள் அங்குள்ள குடிசைகளை பார்த்து முகம் சுழித்துவிடக்கூடாது என்பதற்காக, குஜராத் அரசு இரும்புத்திரை, துணிகளை வைத்து குடிசைகளை மறைத்தது.
இந்நிலையில், இந்தியா - பிரிட்டன் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். லண்டனில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திற்கு நேற்று அவர் வந்தார்.
இந்தியா வந்த பிரிட்டன் பிரதமரை குஜராத் ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் வரவேற்றனர். குஜராத்துக்கு பிரிட்டன் பிரதமர் ஒருவர் வருகை தருவது இதுவே முதல்முறை.
குஜராத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் மேற்கொண்டபோது, சாலையின் இருபுறமும் வெள்ளைத் துணிகளைக் கொண்டு குடிசை பகுதிகள் மறைக்கப்பட்டன.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் முன்வைக்கப்படும் ‘குஜராத் மாடல்’ இதுதானா என சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!