India
மனைவியுடனான வல்லுறவு: ”எல்லா திருமணங்களும் வன்முறை என கண்டிக்க முடியாது” - ஸ்மிரிதி இரானி பரபரப்பு பதில்!
பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டத்தில் கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், திருமண உறவே என்றாலும் கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபடச் செய்வது குற்றச்செயலாக கருதப்பட வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய ஜனநாயக மகளிர் சங்கம், ஒரு ஆண் மற்றும் பெண் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஹரி ஷங்கர், நீதிபதி ஹரி ஷங்கர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில், இந்த விவகாரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பினாய் விஸ்வம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக பேசிய ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பவர் எனக் கூறுவது நல்லதல்ல. இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் இப்போதைக்கு விவாதிக்க மாநிலங்களவை விதி அனுமதிக்காது.
பெண்களையும், குழந்தைகளையும் காப்பது அனைவரின் முன்னுரிமையாகும். எல்லா திருமணத்தையும் வன்முறையின் கீழ் நடப்பதாக கருதத் தேவையில்லை என ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!