India
“70 ஆண்டாக உருவாக்கிய பொது சொத்துக்களை தனது நண்பர்களுக்கு தாரை வார்க்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நாட்டின் அனைத்து பொது சொத்துக்களையும் விற்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாங்கள் பொது சொத்துக்களை விற்கவில்லை. குத்தகைக்குத்தான் விடுகிறோம்” என அலட்சியமாகக் கூறுகிறார்.
இந்நிலையில், நாட்டில் 70 ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட சொத்துக்களைத் தனது நண்பர்களுக்குப் பிரதமர் மோடி வழங்கி விட்டதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
கேரள மாவட்டத்தில் காணொலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, “மோடி அரசு பொருளாதாரத்தை மிக மோசமாகக் கையாண்டு வருகிறது. இதனால் நாடு சிக்கலான காலகட்டத்தில் உள்ளது. 70 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பட்ட சொத்துக்களைப் பிரதமர் மோடி சில குறிப்பிட்ட நண்பர்களுக்குத் தாரை வார்த்துள்ளார். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், அமைப்புச்சார தொழிலாளர்களின் பணமதிப்பு குறைந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் நான்கு நண்பர்களின் சொத்து மதிப்பு மட்டும் அதிகரித்துள்ளது." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!