India
“70 ஆண்டாக உருவாக்கிய பொது சொத்துக்களை தனது நண்பர்களுக்கு தாரை வார்க்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நாட்டின் அனைத்து பொது சொத்துக்களையும் விற்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாங்கள் பொது சொத்துக்களை விற்கவில்லை. குத்தகைக்குத்தான் விடுகிறோம்” என அலட்சியமாகக் கூறுகிறார்.
இந்நிலையில், நாட்டில் 70 ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட சொத்துக்களைத் தனது நண்பர்களுக்குப் பிரதமர் மோடி வழங்கி விட்டதாகக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
கேரள மாவட்டத்தில் காணொலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, “மோடி அரசு பொருளாதாரத்தை மிக மோசமாகக் கையாண்டு வருகிறது. இதனால் நாடு சிக்கலான காலகட்டத்தில் உள்ளது. 70 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பட்ட சொத்துக்களைப் பிரதமர் மோடி சில குறிப்பிட்ட நண்பர்களுக்குத் தாரை வார்த்துள்ளார். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், அமைப்புச்சார தொழிலாளர்களின் பணமதிப்பு குறைந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் நான்கு நண்பர்களின் சொத்து மதிப்பு மட்டும் அதிகரித்துள்ளது." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!