India
"தடுப்பூசி விஷயத்தில் ஒன்றிய அரசு அரசியல்தான் செய்கிறது" : மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் பதிலடி!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தியதை அடுத்து, மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்தியாவை மூன்றாவது அலை தாக்கும் என்றும், அதற்குள் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி காக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசு தடுப்பூசிகளை போதுமான அளவுக்குக் கொள்முதல் செய்யாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக இருக்கும் நிலையில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதாக மாநில அரசுகள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசிகளில் அரசியல் செய்ய வேண்டாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில் அரசியல்தான் செய்கிறது என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், "மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரும்போது பற்றாக்குறை ஏற்படுவது கவலையை அளிக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு கவனத்துடன் இருக்க வேண்டும். தடுப்பூசியில் அரசியல் செய்யவில்லை என ஒன்றிய அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அது தான் நடக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!