India
கொரோனா 2வது அலையில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனா இரண்டாவது அலை நாடுமுழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று நோய் பல குடும்பங்களை புரட்டிபோட்டுள்ளது. தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்), தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய இலவச தொலைபேசி ஆலோசனை மையத்திற்கு கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து ஆலோசனைகளை கேட்டுள்ளனர்.
அதேபோல், கடந்த வாரம் குழந்தைகள் நல காப்பகத்துக்கு ஒரு வாரத்தில் 81 அழைப்புகள் வந்துள்ளது. அதில் அறுபதுக்கும் மேற்பட்ட அழைப்புகள் கொரோனாவால் தனது பெற்றோர்களை இழந்த குழந்தைகளிடமிருந்து வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், ஒரு ஆய்வு அறிக்கையில் வெளியான தகவலின் படி, கொரோனா இரண்டாவது அலையில் மட்டும், 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்த பலரின் உறவினர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
-
தேசிய நலனுக்கு மாறாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டும் விளையாடலாமா? : காங்கிரஸ் கேள்வி!
-
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! : 20.59 லட்சம் தொடக்கப் பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறுவர்!
-
”மிரண்டு இருக்கும் நயினார் நாகேந்திரன்” : கடுமையாக சாடிய அமைச்சர் சேகர்பாபு!
-
“நன்றாக சாப்பிடுங்கள்… படியுங்கள்… விளையாடுங்கள்… வாழ்க்கை நன்றாக இருக்கும்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!