India
கொரோனா 2வது அலையில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனா இரண்டாவது அலை நாடுமுழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று நோய் பல குடும்பங்களை புரட்டிபோட்டுள்ளது. தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்), தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய இலவச தொலைபேசி ஆலோசனை மையத்திற்கு கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து ஆலோசனைகளை கேட்டுள்ளனர்.
அதேபோல், கடந்த வாரம் குழந்தைகள் நல காப்பகத்துக்கு ஒரு வாரத்தில் 81 அழைப்புகள் வந்துள்ளது. அதில் அறுபதுக்கும் மேற்பட்ட அழைப்புகள் கொரோனாவால் தனது பெற்றோர்களை இழந்த குழந்தைகளிடமிருந்து வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், ஒரு ஆய்வு அறிக்கையில் வெளியான தகவலின் படி, கொரோனா இரண்டாவது அலையில் மட்டும், 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்த பலரின் உறவினர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!