India
கொரோனா 2வது அலையில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனா இரண்டாவது அலை நாடுமுழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று நோய் பல குடும்பங்களை புரட்டிபோட்டுள்ளது. தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்), தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய இலவச தொலைபேசி ஆலோசனை மையத்திற்கு கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகளைத் தத்தெடுப்பது குறித்து ஆலோசனைகளை கேட்டுள்ளனர்.
அதேபோல், கடந்த வாரம் குழந்தைகள் நல காப்பகத்துக்கு ஒரு வாரத்தில் 81 அழைப்புகள் வந்துள்ளது. அதில் அறுபதுக்கும் மேற்பட்ட அழைப்புகள் கொரோனாவால் தனது பெற்றோர்களை இழந்த குழந்தைகளிடமிருந்து வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், ஒரு ஆய்வு அறிக்கையில் வெளியான தகவலின் படி, கொரோனா இரண்டாவது அலையில் மட்டும், 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்த பலரின் உறவினர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!