India
13,000 கோடி செலவில் பிரதமருக்கு புதிய இல்லம் கட்ட தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
பிரதமருக்கான நவீன வீடு, புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்தா கட்டுமானங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பலர் உயிரிழந்து வருகின்றனர். போதிய மருத்துவக் கட்டுமான வசதிகள் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள்.
நாடு கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு இந்த 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் விஸ்தா திட்டங்களை செயல்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறது.
எனவே, அந்த திட்டங்களை இந்த நேரத்தில் செயல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதனை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது வழக்கை விரைவில் விசாரணைக்கு பட்டியலிடுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உறுதி அளித்துள்ளார்.
Also Read
-
“விஜயின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக விரைவில் கிழியும்” : முரசொலி தலையங்கம்!
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!