India
மகளிர் தினத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பெண்கள்... பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கம்!
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ச்சியாக தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதுவரை மத்திய அரசு விவசாயிகள் சங்கங்களுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இதனால், விவசாயிகள் தங்களின் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் போராட்டம் 100வது நாளையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மோடி அரசு இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
இந்நிலையில், தங்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக முக்கிய தினங்களில் தங்களின் போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றனர். குடியரசு தினத்தன்று பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்தினர்.
இந்நிலையில், மகளிர் தினத்தையொட்டி 40 ஆயிரம் பெண் விவசாயிகளை டெல்லி போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் இன்று மகளிர் தினத்தில் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் டிராக்டர்கள் மூலம் டெல்லி எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். இன்றைய போராட்டங்களுக்கு பெண்களே தலைமை தாங்கியுள்ளனர். மேலும் இந்தப் போராட்டத்தின் துவக்கத்தில் இருந்தே பெண்கள் அதிக அளவில் பங்கேற்று மத்திய மோடி அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள், "இந்தியாவின் விவசாயத்தில், பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் விதமாக இன்றைய தினம் அமைத்துள்ளது" என தெரிவித்துள்ளனர். முன்னதாக, மகளிர் தினத்தையொட்டி, அமெரிக்க இதழான டைம் பத்திரிக்கை பெண் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற காட்சியை அட்டைப் படமாக வெளியிட்டு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவலம் : ஒரே படுக்கையில் 4 நோயாளிகளுக்குச் சிகிச்சை!