India
“நாடு முழுவதும் சிக்கித் தவிக்கும் பீகார் தொழிலாளர்களுக்கான செலவை அரசே ஏற்கும்”- நிதிஷ் குமார் அறிவிப்பு!
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் 677 இந்தியர்கள், 47 வெளிநாட்டினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநில அரசு மக்களுக்கு பல சலுகை அளித்து வருகிறது. அந்த வகையில், பிற மாநிலங்களில் சிக்கியுள்ள பீகார் மாநில மக்களுக்கான செலவை அரசே ஏற்கும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது மற்றும் பாதிப்புகளை சரி செய்வதற்கான உயர்நிலை ஆய்வுக் கூட்டம் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார், பீகார் மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ள தொழிலாளர்கள் ஊரடங்கால் கடும் சிரமங்களைச் சந்தித்துள்ளனர்.
அவர்களுக்கான செலவுத் தொகையை பீகார் மாநில அரசே ஏற்கும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கொரோனா பாதிப்பு நிவாரணமாக ரூ.100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினக்கூலிகளுக்கு தங்கும் முகாம்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!