India
டெல்லி தேர்தல்: குடியுரிமைக்காக போராடும் வேளையிலும் ஜனநாயக கடமையாற்றிய ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள்!
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கு நேற்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. குளிர் காரணமாக முற்பகலில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. அதன் பிறகு, வாக்குச்சாவடிகளுக்கும் வரும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இருந்த போதிலும், தேர்தலின் இறுதியில் 60 சதவிகித வாக்குகளே பதிவாகியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறுகிறது.
இதற்கிடையில், டெல்லி சமீப காலமாக மிகவும் பரபரப்பான பகுதி என்றால் அது ஷாகீன் பாக்தான். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல நாட்களாக இஸ்லாமிய பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பரபரப்புக்கு உள்ளான வாக்குச்சாவடியாகவும் ஷாகீன் பாக் பகுதி கருதப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியில் குடியுரிமையை காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள், ஜனநாயக உரிமையையும் விட்டுக்கொடுக்காமல் தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அதில், பெண்கள் இரண்டு மூன்று பிரிவுகளாக பிரிந்து வாக்களித்துள்ளனர். ஒரு பகுதியினர் காலை, மற்றொரு பகுதியினர் பிற்பகல், மாலை என பிரிந்து வாக்களித்திருக்கிறார்கள். அதன் பிறகு குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்துள்ளனர்.
இது போன்று ஒற்றுமையாக உள்ள மக்களை மதத்தின் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு பிரிக்க எண்ணுவது எத்தகைய கொடிய எண்ணம் உடையது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“அநாகரிகமான பேச்சு” : அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சாடல்!
-
திருச்சி ரயில் நிலையத்தில் Laptop திருடிய த.வெ.க நிர்வாகி : கைது செய்த காவல்துறை!
-
பதில் சொல்ல துப்பில்ல ; அதை விட்டுட்டு...! : செங்கோட்டையனுக்கு தி.மு.க IT WING கண்டனம்!
-
“திமுக தயவில்தான் ஆட்சி நடக்கிறது.. நாம் தான் வழியனுப்பி வைத்தோம்” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்.. மான ஈனத்தைப் பற்றிக் கவலையில்லா காங்கிரஸ்!” : முரசொலி காட்டம்!