DMK
தி.மு.க-வில் இணைந்த எடப்பாடி முன்னாள் எம்.எல்.ஏ... கூட்டம்கூட்டமாக கழகத்தில் இணையும் மாற்றுக்கட்சியினர்!
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. தி.மு.க கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டி, வேட்பாளர்கள் தேர்வுப் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்து இந்த முறை 187 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ களமிறங்குகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வெற்றிக் கூட்டணியான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. பல்வேறு அமைப்புகளும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ பா.ம.க-வைச் சேர்ந்த கணேசன் தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஐ.கணேசன் மற்றும் அவரது மகன் மருத்துவர் ஐ.ஜி.நாகராஜன், எம்.எஸ். (ஆர்த்தோ) ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
சிவகங்கை மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் எம்.எல்.ஏ முன்னிலையில், அம்மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் தி.மு.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் பலர், தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவுச் செயலாளரும், செஞ்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனர்.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!