Cinema
பிரபல மலையாள நடிகர் திடீர் கைது : பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பினு பி.காமல். தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மேலும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதையடுத்து சில மலையாள படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் திருவனந்தபுரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு நிலமேலுக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது இவரது இருக்கைக்கு அருகே இளம் பெண் ஒருவர் அமர்ந்துள்ளார்.
அவரிடம், நடிகர் பினு பி.காமல் தவறாக நடந்துள்ளார். இதனால் அப்பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து பேருந்திலிருந்த மக்கள் பினு பி.காமலிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவர் பேருந்திலிருந்து இறங்கி ஓடியுள்ளார்.
இருந்தும் பொதுமக்கள் அவரை விரட்டி சென்று போலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடிகர் பினு பி.காமலை கைது செய்துள்ளனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!