Cinema
“ஆத்தா நா பாஸ் ஆகிட்டேன்..” -73 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நடிகை.. தள்ளாத வயதிலும் தீவிர முயற்சி!
ஆர்வம் இருந்தால் சாதிக்கலாம்; அதற்கு வயது ஒரு தடையில்லை என்று பலரும் தங்கள் வயதான காலத்திலும் பலவற்றை சாதித்து வருகின்றனர். அண்மையில் கூட 60 வயதுக்கு மேல் உள்ள நபர் ஒருவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். மேலும் சிலர் மாநில அரசு தேர்வுகள் எழுதி பாஸ் பண்ணினர்.
இப்படி அடுக்கடுக்காக அதிகமான சம்பவங்கள் கூறிக்கொண்டே போகலாம். இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவர் தனக்கு வயதானதை கூட பொருட்படுத்தாமல் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதாவது கேரளாவை சேர்ந்த குணச்சித்திர நடிகையாக இருப்பவர் லீனா ஆண்டனி. இவர் பஹத் பாஸில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற படத்தில் அபர்ணாவுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அவ்வப்போது படங்களில் நடித்து வந்த இவர், நடிப்புக்கு சிறிது இடைவெளி கொடுத்து படிப்பில் முழு கவனம் செலுத்தினார்.
அந்த வகையில் இவரது மகன் மற்றும் மருமகள் அளித்த ஊக்கத்தினால் தற்போது 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து இவர் அடுத்து 11-ம் வகுப்பு படிக்க ஆசைப்படுகிறார். இதுமட்டுமின்றி அவர் english spoken class-ம் செல்கிறார்.
முன்னதாக இவர் இதே 10-ம் வகுப்பு தேர்வு இரண்டு முறை எழுதியும் அதில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் தனது விடா முயற்சியால் தற்போது எழுதிய தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். வர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது குறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி லீனாவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் பலரும் இவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
கரூர் விவகாரம் - உண்மை வெளிவந்துவிடும் என்பதால் காவல்துறை அதிகாரிகளை மாற்றிய விஜய் : டி.கே.எஸ் இளங்கோவன்!
-
கலைஞரின் 103 ஆம் பிறந்த நாள் - 4 மாநிலங்களில் 103 பரப்புரைக் கூட்டங்கள் : ஆசிரியர் கி.வீரமணி அறிவிப்பு!
-
”உடன்பிறப்பே..! ஜூன்-3 நம் புத்தெழுச்சி நாள்..! உடன்பிறப்புகளுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்”
-
”வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. எகிறிய தேர்ச்சி விகிதம்.. அசத்திய மாணவிகள்” - முழு விவரம்!
-
”அ.தி.மு.க - வினருக்கு அமைச்சர் பதவி.. த.வெ.க-வின் மோசடி.. துணைபோகும் சபாநாயகர்” - முரசொலி விமர்சனம்!