Cinema
”தாய்மொழி அவமானம் அல்ல; அடையாளம்” : நெஞ்சுக்கு நீதி பார்த்துவிட்டு வந்த ஆரி அர்ஜுனன் கூறியது என்ன?
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடிகர் ஆரி அர்ஜுனன் மற்றும் சுரேஷ் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஆரி,
இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு படம். ஒவ்வொரு வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கும் காட்ட வேண்டிய ஒரு படம். சாதிகள் இருக்குதடி பாப்பா என்று சொல்லிக்கொண்டிருக்கிற சமூகத்தில் இருக்கிறோம்.
சமூகநீதியை நாம் கொன்றுக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் அந்த கதாபாத்திரம் இறந்திருக்கிறது. தாய்மொழி அவமானம் அல்ல. அடையாளம். எவ்வளவு மொழி கற்றுக் கொள்கிறோம் என்பது முக்கியம் அல்ல. இதுதான் கற்று ஆக வேண்டும் என்றால் பிரச்சனை. எந்த மொழி கற்றுக் கொள்வதும் என்பது அவரவர்கள் விருப்பம்.
எந்த மொழியில் பிறந்தோம் என்பது அவமானமல்ல. அது பெருமை. அதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
சாதிய பாகுபாடு எனக்கும் நடந்திருக்கிறது. எல்லாக் குழந்தைகளுக்கும் சாதிய பாகுபாடு இல்லாமல் இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும்.
எனக்காக கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுகிறது என்ற விதையை அம்பேத்கர் விதைத்திருக்கிறார். அம்பேத்கர் சாதி தலைவர் அல்ல சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு தலைவர்.
பெயரின் பின்னாடி இருக்கக்கூடிய ஜாதியை தமிழ்நாட்டில் ஒழித்திருக்கிறோம். பெயரிலே தமிழ்நாடு இருக்கிறது. முழுவதுமாக மாறி இருக்கிறாதா என்று கேட்டால் மாறி இருக்கிறது என்று சொல்ல முடியும் என்றார்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!