Cinema
”நயன்’க்கு டப்பிங் பேச ரொம்ப சிரமப்பட்டேன்” - அண்ணாத்த பட அனுபவத்தை பகிர்ந்த தீபா வெங்கட்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் 168வது படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தீபாவளி பண்டிகையான வருகிற நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்களாம். இதுபோக, குஷ்பூ, மீனா, சூரி என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ராஜா ராணி படம் முதல் நயன்தாராவுக்கு டப்பிங் பேசி வரும் நடிகையும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் அண்ணாத்த படத்தில் நயன்தாராவுக்கு டப்பிங் கொடுத்தது பற்றிய சிறு துளியை பகிர்ந்துள்ளார். அதனை விகடன் இணையதளம் பகிர்ந்துள்ளது.
அதில், நயன்தாராவுக்கும் எனக்கும் இருக்கும் அன்பு மிகவும் ஸ்பெஷலானது. டப்பிங் வேலைகள் மட்டுமல்லாமல் பெர்சனலாகவும் நாங்கள் இருவரும் அதிகம் பகிர்ந்துகொள்வது வழக்கம். இப்படி இருக்கையில் அண்ணாத்த படத்துக்காக அவங்களுக்கு டப்பிங் பேசினப்போ கொஞ்சம் ஸ்ட்ரக் ஆகிட்டேன்.
ஏனெனில், நான் மிகப்பெரிய ரஜினி ரசிகை. அவரோட கூட நயன்தாராவுக்கு வர வசனங்கள பேசுறப்போ யார பாக்குறதுனே தெரியாம போயிருச்சு. என்ன மறந்து ஒரு ரசிகையா படத்துல மூழ்கிட்டேன்.” எனக் தீபா வெங்கட் கூறியிருக்கிறாராம்.
Also Read
-
“கீழ்வெண்மணியும் கீழ்த்தரமான விமர்சனமும்” : ச.தமிழ்ச்செல்வனுக்கு முரசொலி பதிலடி!
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!