உலகம்

6 மாதத்தை தாண்டியும் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் : 34 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு.. விவரம் என்ன ?

இஸ்ரேலின் தாக்குதலில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதத்தை தாண்டியும் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் : 34 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு.. விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் வடக்கு காசாவை முழுமையாக கைப்பற்றிய இஸ்ரேலிய படைகள் தெற்கு காசாவில் போரினை தொடர்ந்து நடத்தி வந்தன.

6 மாதத்தை தாண்டியும் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் : 34 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு.. விவரம் என்ன ?

இந்த நிலையில், இந்த தாக்குதலில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது தவிர 76,901 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

UNICEF அமைப்பு அளித்த அறிக்கையின்படி இஸ்ரேலின் தாக்குதலால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீனிய குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயம் அடைகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த போர் காரணமாக 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பசி கொடுமையால் வாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories