உலகம்

உக்ரைனின் கட்டமைப்புகளை சிதைத்த வான்வெளி தாக்குதல் : கடல் தாக்குதலுக்கு நிலத்தில் பதிலடி கொடுத்த ரஷ்யா !

உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்ரைனின் கட்டமைப்புகளை சிதைத்த வான்வெளி தாக்குதல் : கடல் தாக்குதலுக்கு நிலத்தில் பதிலடி கொடுத்த ரஷ்யா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது.

உக்ரைனின் கட்டமைப்புகளை சிதைத்த வான்வெளி தாக்குதல் : கடல் தாக்குதலுக்கு நிலத்தில் பதிலடி கொடுத்த ரஷ்யா !

இந்த போரில் சில நாட்களுக்கு முன்னர் பல மாதங்கள் தொடர் முற்றுகைக்கு பின்னர் உக்ரைனின் அவ்டிவ்கா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. இதன் காரணமாக ரஷ்யா மீதான தாக்குதலை உக்ரைன் அதிகரித்தது. அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் போர்கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி பல ரஷ்யா போர்கப்பல்களை உக்ரைன் மூழ்கடித்தது. இந்த தாக்குதலால் உக்ரைன் போரில் முன்னிலை பெறுவதைப் போல தோற்றமளித்தது.

இந்த நிலையில், உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் கட்டமைப்புகள் மீது ரஷ்யா பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. காா்கிவ் நகருக்கு மின்சாரம் வழங்கும் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷ்யா விமானதாக்குதலையும், ஏவுகணைகளை, ட்ரோன்களை வீசி சரமாரியாக ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்காக 99 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதே போல உக்ரைனின் நீர் கட்டமைப்புகளின் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் உக்ரைனுக்கு ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories