உலகம்

ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... ஆண்டின் தொடக்கத்தில் உலகை உலுக்கும் சோகம் !

ஜப்பானில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... ஆண்டின் தொடக்கத்தில் உலகை உலுக்கும் சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜப்பானின் வடக்கு, மத்திய பகுதிகளில் புத்தாண்டு அன்று (01.01.2024) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி பிற்பகல் சுமார் 12.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 முதல் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சுமார் 1.30 மணி நேரத்தில் மட்டுமே தொடர்ந்து 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது..

இந்த தொடர் நிலநடுக்கத்தில் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்த நிலையில், வீடு, கடை உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருக்கும் மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து ஹோன்ஷூ அருகே 13 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் அபாயம் உள்ளது என்றும், இஷிகாவா, நிகட்டா மற்றும் டொயாமா ஆகிய கடலோரா மாகாண பகுதிகளுக்கு ஜப்பான் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... ஆண்டின் தொடக்கத்தில் உலகை உலுக்கும் சோகம் !

மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடலோரப் பகுதிகளை விட்டு மக்கள் விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுத்து எச்சரித்து சில மணி நேரங்களிலேயே அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அலை தாக்கியது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுற்றி தண்ணீர் சூழ்ந்திருக்கும் ஜப்பான், கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நிலநடுக்கங்களை சந்தித்ததில்லை. ஹொகைடோ தீவுகள் முதல் நாகசாகி வரை நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து ஒரே நாளில் மட்டும் 155 முறைக்கும் மேலாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. ஏறத்தாழ 1000-ற்கும் மேலான வீடுகள் சேதமடைந்தது.

எதிர்பாராத சூழலில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அந்நாடு பெரும் கலக்கத்தில் இருக்கும் நிலையில், மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த தொடர் நிலநடுக்கத்தில் சுமார் 8 பேர் உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு பலருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் சிலர் இடிபாடுகளில் சிக்கி மீட்கமுடியாமல் தவிக்கப்படுவதாகவும் கூறபடுகிறது.

ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... ஆண்டின் தொடக்கத்தில் உலகை உலுக்கும் சோகம் !

சாலை உள்ளிட்ட பல பகுதிகள் சேதமடைந்துள்ளதால் சிக்கியவர்களை மீட்கமுடியவில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஃபுமியா கிஷிடா வருத்தம் தெரிவித்துள்ளார். எனினும் அந்நாட்டு மீட்புப்படையினர் மக்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் பலரையும் மீட்டு விளையாட்டு அரங்குகள், பள்ளி, உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மீட்புக்குழு பத்திரமாக அனுப்பியது.

ஒரு சில பகுதிகளில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்கள் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சோகத்திலும் பயத்திலும் உள்ளனர். அந்நாட்டு அரசு மீட்புப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. நிலநடுக்கத்தால் நோட்டோ மாகாணத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் அங்கே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவு அபாயமும் உள்ளது.

ஜப்பானில் ஏற்கனவே 2011-ல் 9.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டு, சுனாமி அலை தாக்கியது. இதில் சுமார் 18,500 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஃபுகுஷிமாவில் இருந்த அணுஆயுத உலையை அப்படியே அழித்துவிட்டது. இதுதான் உலகின் மோசமான பேரிடர் என சொல்லப்படுகிறது. அதேபோல 2004-ல் இந்தோனேசியா அருகே ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இந்தியாவில் சுனாமி ஏற்பட்டது என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories