உலகம்

4 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல் : 13 ஆயிரத்தை தாண்டிய பாலஸ்தீனிய மக்களின் பலி எண்ணிக்கை !

ஹமாஸ் அமைப்பு பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வசதியாக 4 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவிப்பதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

4 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல் : 13 ஆயிரத்தை தாண்டிய பாலஸ்தீனிய மக்களின் பலி எண்ணிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.

4 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல் : 13 ஆயிரத்தை தாண்டிய பாலஸ்தீனிய மக்களின் பலி எண்ணிக்கை !

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பு பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளை விடுவிக்க வசதியாக 4 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவிப்பதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. . இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

அதே நேரம், இது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே என்றும், போர்க்கால அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்துள்ளது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாகு அறிவித்துள்ளார். கத்தார் நாடு மேற்கொண்ட அமைதி பேச்சுவார்த்தையின் நடுவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories