உலகம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொத்துகளை தேசியமயமாக்கிய ரஷ்யா.. விரைவில் ஏலத்தில் விற்கவுள்ளதாக அறிவிப்பு !

தங்கள் நாட்டோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் இருந்த அரசியல் தலைவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சொந்தமான சொத்துக்களை தேசியமயமாக்கி ஏலம் விடப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொத்துகளை தேசியமயமாக்கிய ரஷ்யா.. விரைவில் ஏலத்தில் விற்கவுள்ளதாக அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொத்துகளை தேசியமயமாக்கிய ரஷ்யா.. விரைவில் ஏலத்தில் விற்கவுள்ளதாக அறிவிப்பு !
VADIM GHIRDA

முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனுக்கு சொந்தமாக இருந்த கிரிமியா, டான்பாஸ் போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இருந்த ரஷ்ய ஆதரவு போராட்டக்காரர்கள் ரஷ்யாவின் ஆதரவோடு கிளர்ச்சி செய்து அதனை ரஷ்யாவோடு இணைந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா பகுதியில் டான்பாஸ் லூஹான்ஸ்க், கொசான், ஸபோரிஷியா மற்றும் டொனட்ஸ் போன்ற பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. மேலும், கடந்த வருடம் இந்த பகுதிகளை ரஷ்யாவோடு இணைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், பெருவாரியான மக்கள் ரஷ்யாவோடு இணைய ஆதரவு தெரிவித்ததாகவும், இதனால் அந்த பகுதிகள் ரஷ்யாவோடு இணைக்கப்பட்டதாகவும் ரஷ்யா அறிவித்தது.

பின்னர் சில நாட்களுக்கு முன்னர் தங்கள் நாட்டோடு இணைக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளில் பிராந்திய தேர்தலை ரஷ்யா நடத்தியது. இந்த தேர்தலில் ரஷ்ய ஆதரவு கட்சி அதிக இடத்தில் வெற்றிபெற்றதாகவும் ரஷ்யா அறிவித்தது. ஆனால், இந்த தேர்தலை ஏற்கமுடியாது என ஐரோப்பிய யூனியன் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் அறிவித்தன.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொத்துகளை தேசியமயமாக்கிய ரஷ்யா.. விரைவில் ஏலத்தில் விற்கவுள்ளதாக அறிவிப்பு !

இந்த நிலையில், உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் இருந்த அரசியல் தலைவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சொந்தமான சொத்துக்களை தேசியமயமாக்கி ஏலம் விடப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில், உக்ரைன் நாட்டு அரசியல் தலைவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சொந்தமான 500 சொத்துகள் அடையாளம் காணப்பட்டு அவை தேசியமயமாக்கப்பட்டது என்றும், 815 மில்லியன் ரூபிள் மதிப்பிலான அந்த சொத்துக்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்சிக்கு சொந்தமான சொத்துக்களும் தேசியமயமாக்கி ஏலத்துக்கு விடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு கிரிமியா பகுதியில் உள்ள சொத்துக்களும் விரைவில் ஏலத்துக்கு வரவுள்ளதாக ரஷ்யா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் நாட்டு அரசியல் தலைவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சொந்தமான 500 சொத்துகளை தேசியமையமாக்கிய ரஷ்ய அதிகாரிகள், 815 மில்லியன் ரூபிள் மதிப்பிலான அந்த சொத்துக்களை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories