உலகம்

நடுவானில் விமானத்தில் பற்றிய தீ.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.. இறுதியில் நடந்தது என்ன ?

நடுவானில் விமானத்தின் எஞ்சினில் பறவை மோதியதால் தீப்பிடித்து எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் விமானத்தில் பற்றிய தீ.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.. இறுதியில் நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சமீப காலமாக விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக விமானங்கள் அடிக்கடி அவசரமாக தரையிறங்கும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் விமானம் ஒன்று தீ பிடித்த காரணத்தால் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உலா கொலம்பஸ் நகரில் இருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் விமானம் ஒன்று அரிசோனா மாகாணத்திற்கு சென்றுள்ளது. விமானம் கொலம்பஸ் நகரில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானத்தின் எஞ்சினில் பறவை ஒன்று மோதியுள்ளது.

நடுவானில் விமானத்தில் பற்றிய தீ.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.. இறுதியில் நடந்தது என்ன ?

இதன் காரணமாக எஞ்சினில் இருந்து புகை எழும்பத்தொடங்கியுள்ளது. இதனை உணர்ந்த விமானிகள் விமான கட்டுப்பாடு அறைக்கு இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். இதனிடையே எஞ்சின் திடிரென தீப்பிடித்து எரிய இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதற்குள் விமானம் அவசரமாக தரையிங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் புறப்பட்ட கொலம்பஸ் நகரிலேயே விமானம் அவசரம் அவசரமாக தரையிறங்கியது. அதன் பிறகு பயணிகள் அவசரம் அவசரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் எஞ்சினில் பிடித்த தீயும் அணைக்கப்பட்டது.

நடுவானில் விமானத்தில் பற்றிய தீ.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.. இறுதியில் நடந்தது என்ன ?

அதன்பின்னன் பயணிகள் அனைவரும் வேறு விமானத்தில் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாரும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories