உலகம்

ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுதான் காரணமா ?-இளைஞரின் பதிவின் மூலம் வெளிவந்த உண்மை !

தேர்தலில் போட்டியிட முடியாத விரக்தியில் ஜப்பான் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீசி இருக்க கூடும் என போலிஸார் கூறியுள்ளனர்.

ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுதான் காரணமா ?-இளைஞரின் பதிவின் மூலம் வெளிவந்த உண்மை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான ஜப்பானின் பிரதமராக கடந்த 2020 ஆம் ஆண்டு ஃபுமியோ கிஷிடோ பதவியேற்றார். அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவந்த நிலையில், ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வகயமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஃபுமியோ கிஷிடோ கலந்துகொண்டார்.

அவர் அந்த கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த மர்மநபர் ஒருவர் தான் வைத்திருந்த பைப் வெடி குண்டை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோவை நோக்கி வீசியுள்ளார். இந்த குண்டு ஃபுமியோ கிஷிடோவுக்கு சற்றுமுன் விழுந்து வெடித்தது.

ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுதான் காரணமா ?-இளைஞரின் பதிவின் மூலம் வெளிவந்த உண்மை !

இந்த திடீர் தாக்குதலில் அந்த பகுதியே கரும்புகையால் சூழ்ந்த நிலையில், பிரதமரின் பாதுகாவலர்கள் அவரை அந்த பகுதியில் இருந்து உடனடியாக பத்திரமாக அழைத்துச்சென்றனர். அதோடு பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் உடனடியாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த சம்பவத்தில் குண்டு வீசிய மர்மநபரை போலிஸார் கைதுசெய்ததாகவும். அவரிடம் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடப்பதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். அதேபோல இந்த தாக்குதலில் பிரதமர் ஃபுமியோ கிஷிடோவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் மீது வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுதான் காரணமா ?-இளைஞரின் பதிவின் மூலம் வெளிவந்த உண்மை !

இந்த சம்பவத்தில் 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கான காரணம் வெளிவந்துள்ளது. அந்த இளைஞரின் சமூகவலைத்தள பக்கத்தை போலிஸார் பார்த்தபோது அதில், வேலையில்லாத அவர் வரும் ஜூலை மாதம் ஜப்பானில் நடக்க இருந்த மேலவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது தெரியவந்தது.

மேலும், அந்த தேர்தலில் போட்டியிட வயது 30 என்றும், அதோடு ரூ.18.29 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என்ற விதி காரணமாக அவர் தேர்தலில் போட்டியிடமுடியவில்லை என்பதும் அவரின் பதிவுகள் மூலம் தெரியவந்தது. இதற்காக அவர், மாவட்ட நீதிமன்றத்தில் போட்டியிட அனுமதிக்கும்படி கோரி கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்துள்ளதையும் போலிஸார் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக தேர்தலில் போட்டியிட முடியாத விரக்தியில் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீசி இருக்க கூடும் என போலிஸார் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories