உலகம்

குழந்தை கடத்தல்,வன்கொடுமை வழக்கில் ரஷ்ய அதிபர் குற்றவாளி-புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட முக்கிய குற்றசாட்டுகளை ரஷ்யா அதிபர் புதினுக்கு எதிராக சுமத்தியுள்ள சர்வதேச நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

குழந்தை கடத்தல்,வன்கொடுமை வழக்கில் ரஷ்ய அதிபர் குற்றவாளி-புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒரு வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

குழந்தை கடத்தல்,வன்கொடுமை வழக்கில் ரஷ்ய அதிபர் குற்றவாளி-புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. , உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் வலுவான அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்கிய நிலையில், இது மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றுள்ளது.

மேலும், சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீரென உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் செய்தது ரஷ்யாவின் கோவத்தை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அறிவித்த நிலையில், தற்போது தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

குழந்தை கடத்தல்,வன்கொடுமை வழக்கில் ரஷ்ய அதிபர் குற்றவாளி-புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

இதனிடையே உக்ரைன்-ரஷ்யா போரில் 18,358 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா அறிவித்து இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல என்றும் கூறியிருந்தது. மேலும், இந்தப் போர்க் காலத்தில் ரஷ்யப் படைகள் பல்வேறு விதிமீறல்களிலும் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளை ஐ.நா முன்வைத்திருந்தது.

உக்ரைனில் நடக்கும் போர்க் குற்றங்கள் நடப்பதாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்த நிலயில், போர்க் குற்றங்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினே பொறுப்பு என்று அந்த நீதிமன்றம் கூறியுள்ளது. குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, போர்க்குற்றம் உள்ளிட்ட முக்கிய குற்றசாட்டுகளை சுமத்தியுள்ள சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

குழந்தை கடத்தல்,வன்கொடுமை வழக்கில் ரஷ்ய அதிபர் குற்றவாளி-புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

ஆனால், சர்வதேச நீதிமன்றத்தின் இந்த குற்றசாட்டுகளை மறுத்துள்ள ரஷ்யா சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்பதால் பிடி வாரண்ட் செல்லாதது என்றும் கூறியுள்ளது. சர்வதேச நீதிமன்றத்திற்கு போதுமான அதிகாரம் இல்லாத நிலையில் இந்த பிடிவாரண்ட் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories