உலகம்

“தலைவருக்கு குசும்ப பாத்தீங்களா..” -ட்விட்டர் CEO சீட்டில் வளர்ப்பு நாய்.. எலான் மஸ்க் பதிவால் சலசலப்பு !

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் எலான் மஸ்க், தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை பகிர்ந்து, ' இதுதான் ட்விட்டரின் புதிய சிஇஓ' என பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

“தலைவருக்கு குசும்ப பாத்தீங்களா..” -ட்விட்டர் CEO சீட்டில் வளர்ப்பு நாய்.. எலான் மஸ்க் பதிவால் சலசலப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகின் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக தான் பதவி ஏற்றுக்கொண்டதில் இருந்து ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை இவர் செய்து வருகிறார். இவரது நடவடிக்கை அங்கிருக்கும் ஊழியர்களுக்கு நாளுக்கு நாள் பயத்தை ஏற்படுத்தி வருகிறது.

“தலைவருக்கு குசும்ப பாத்தீங்களா..” -ட்விட்டர் CEO சீட்டில் வளர்ப்பு நாய்.. எலான் மஸ்க் பதிவால் சலசலப்பு !

முதலில் ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்த இவர், அடுத்ததாக பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு பணிநீக்கம் செய்தார். சுமார் 50%-க்கும் அதிகமானோர் நீக்கப்பட்டதால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வயிற்றில் நெருப்பை கட்டி இருப்பது போல் தினமும் வாழ்கின்றனர்.

“தலைவருக்கு குசும்ப பாத்தீங்களா..” -ட்விட்டர் CEO சீட்டில் வளர்ப்பு நாய்.. எலான் மஸ்க் பதிவால் சலசலப்பு !

இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல்வேறு தரப்பில் இருந்தும் பல பேச்சுக்கு உள்ளானார். மேலும் இவரை கிண்டல் செய்யாத ஆளே இல்லை என்றே கூறலாம். தொடர்ந்து இவருக்கு பிடிக்காதவர்களே நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனிடையே ட்விட்டரில் புது புது அப்டேட்கள் அறிமுகம் செய்வதாக கூறி வந்த இவர், பல்வேறு வேடிக்கையான விஷயங்களை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் தற்போது இவர் செய்துள்ள காரியம்.

“தலைவருக்கு குசும்ப பாத்தீங்களா..” -ட்விட்டர் CEO சீட்டில் வளர்ப்பு நாய்.. எலான் மஸ்க் பதிவால் சலசலப்பு !

அதாவது தான் சி.இ.ஓ-வாக பதவி வகிக்கலாமா? வேண்டாமா? என்று இவர் ட்விட்டர் பக்கத்தில் தனது Followers-களுடன் polling என்று சொல்லப்படும் ஓட்டெடுப்பு நடத்தினார். அப்போது இவருக்கு எதிராக சுமார் 57%-க்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இந்த நிலையில் தனக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு நக்கலாக பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "CEO பதவிக்கு முட்டாள் ஒருவரை கண்டுபிடித்த பிறகு, விரைவில் தலைமை பதவியில் இருந்து விலகுவேன். மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களை மட்டும் வழிநடத்த போகிறேன்" என்று பதிவிட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதாவது தனது வளர்ப்பு நாயின் புகைப்படத்தை பகிர்ந்து, டுவிட்டரின் புதிய சிஇஓ என்றும், மற்றவர்களை விட இது சிறந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்க் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. மேலும் எலன் மஸ்கின் வளர்ப்பு நாயின் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories