உலகம்

நடுக்கடலில் மூழ்கத்தொடங்கிய கப்பல்.. கூக்குரலிட்டு உதவிகேட்ட ஈழத் தமிழர்கள்.. இறுதியில் நடந்த அதிசயம் !

இலங்கையில் இருந்து கனடா நோக்கி தமிழர்களை ஏற்றிச் சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கத்தொடங்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்கடலில் மூழ்கத்தொடங்கிய கப்பல்.. கூக்குரலிட்டு உதவிகேட்ட ஈழத் தமிழர்கள்.. இறுதியில் நடந்த அதிசயம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2019ம் ஆண்டு வந்த கொரோனா காரணமாக இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்து. அதனைத் தொடர்ந்து இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை பலமடங்கு உயர்ந்து விட்ட நிலையில், அங்கு பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையில் நிலைமை மோசமடைந்ததால் இலங்கை தமிழர்கள் 300க்கும் அதிகமானோர் புகலிடம் தேடி கப்பல் ஒன்றில் கனடா நோக்கி சென்றுள்ளனர். இவர்கள் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் இடையே சென்றபோது திடீரென நடுக்கடலில் மூழ்கத்தொடங்கியுள்ளது.

நடுக்கடலில் மூழ்கத்தொடங்கிய கப்பல்.. கூக்குரலிட்டு உதவிகேட்ட ஈழத் தமிழர்கள்.. இறுதியில் நடந்த அதிசயம் !

அப்போது கப்பலில் இருந்த சிலர் இலங்கை கடற்படையை தொடர்பு தங்கள் ஆபத்தான நிலை குறித்து கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கொழும்புவில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சார்பில் சிங்கப்பூர், வியட்நாம், மற்றும் பிலிப்பைன்ஸ் அரசுகளுக்கு கப்பலில் அபாயநிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் கிடைத்ததில் அந்தந்த அரசுகள் சார்பில் மீட்புப்படையினர் கப்பலை நோக்கி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் சிங்கப்பூர் கடற்படையினர் கப்பல் மூழ்கிக்கொண்டிருந்த இடத்துக்கு விரைந்து சென்று அந்த கப்பலையும், கப்பலில் பயணித்த 306 பயணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

நடுக்கடலில் மூழ்கத்தொடங்கிய கப்பல்.. கூக்குரலிட்டு உதவிகேட்ட ஈழத் தமிழர்கள்.. இறுதியில் நடந்த அதிசயம் !

இவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் வியட்நாமுக்கு அழைத்துச்செல்லப்படும் என்றும், அதன் பிறகு அந்த கப்பலில் பயணித்தவர்களின் விவரம் தெரிய வரும் என்றும் இலங்கை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories