உலகம்

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவு.. இறுதி நிகழ்ச்சி எப்போது நடைபெறும்?: அடுத்து நடக்கப்போவது என்ன?

எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் இரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவு.. இறுதி நிகழ்ச்சி எப்போது நடைபெறும்?: அடுத்து நடக்கப்போவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96.பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

ராணி எலிசபெத் மறைவிற்கு பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு உள்ளன. இதற்கான நெறிமுறைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்து வைத்துள்ளனர். அதைப்பற்றி தற்போது காணலாம். இங்கிலாந்து மகாராணி மறைவு நாளை ‘D Day’ அதாவது கறுப்பு நாள் என்று அறிவிக்கப்படும்.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவு.. இறுதி நிகழ்ச்சி எப்போது நடைபெறும்?: அடுத்து நடக்கப்போவது என்ன?

ராணியின் மறைவை ‘லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்’ என்று குறிப்பிடுவர். இந்த குறியீட்டின்படி, முதலில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். பின்னர், ராணியின் தனிப்பட்ட செயலாளருக்குத் தெரிவிக்கப்படும். அவர் தொலைப்பேசியில் பிரிட்டன் பிரதமரைத் தொடர்பு கொண்டு, ‘லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்’ என்ற குறியீட்டை தெரிவிப்பார். தொடர்ந்து இங்கிலாந்து ராணி உயிரிழந்து விட்டத்தை பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

பிரிட்டன் அரசு ஊடகமான பிபிசி டிவி மற்றும் ரேடியோ மூலம் அவரது மரணம் குறித்து செய்தி பொதுமக்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அனைத்து பிபிசி ஊடகங்களிலும் பிற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, எலிசபெத் மகாராணி இறுதிச்சடங்கு குறித்த நேரலை செய்யப்படும். பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயில்களிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படும். இளவரசர் சார்ல்ஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் பொதுமக்களிடம் உரையாற்றுவார்கள். அரசு கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவு.. இறுதி நிகழ்ச்சி எப்போது நடைபெறும்?: அடுத்து நடக்கப்போவது என்ன?

ராணி இப்போது ஸ்காட்லாந்தில் உள்ள நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார் "ஆப்ரேஷன் யூனிகார்ன்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும்.

இரண்டாம் நாள் காலை, பிரிட்டன் கவுன்சிலின் உறுப்பினர்கள் சார்லஸை புதிய அரசராக அறிவிப்பார்கள். செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் ராயல் எக்ஸ்சேஞ்சில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

மூன்று மற்றும் நான்காம் நாளில் புதிய அரசராக அறிவிக்கப்பட்டுள்ள சார்லஸ் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, பெல்பெஸ்ட் பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். இந்த சுற்றுப்பயணத்தை "ராயல் டூர்" என்பார்கள்.

மறுபுறம் லண்டனில் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்கான ஒத்திகைகள் மேற்கொள்ளப்படும். ஐந்தாம் நாளில், பக்கிங்ஹாம் அரண்மனையில் தொடங்கி, நாடாளுமன்ற மாளிகை வரை ஊர்வலம் நடைபெறும்.

ராணி எலிசபெத்தின் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் வங்கிகள் மற்றும் Stock Market-கள் மூடப்படும்.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவு.. இறுதி நிகழ்ச்சி எப்போது நடைபெறும்?: அடுத்து நடக்கப்போவது என்ன?

மகாராணியின் மறைந்த உடலானது பாராளுமன்றத்தில் மூன்று நாள்கள் வைக்கப்படும். லட்சக்கணக்கான மக்கள் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் கட்டுக்கடங்காமல் குவியும் மக்களை ஒழுங்குபடுத்த விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ராணியின் இறுதிக் காரியங்கள் செய்யப்படும்.

அதைத்தொடர்ந்து 10ஆம் நாளில் இறுதிச்சடங்கு நடைபெறும். எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் இரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.

இறுதிச் சடங்கிற்குப் பிறகு, ராணி உடல் விண்ட்சர் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு அவர் தனது கணவர் இளவரசர் பிலிப் மற்றும் அவரது தந்தை கிங் ஜார்ஜ் VI ஆகியோருக்கு அருகில் அடக்கம் செய்யப்படுவார்.

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories