தெற்காசியாவில் கடந்த சில நாட்களாக நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று ஈரானில் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீரில் சேலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2 ஆக நில நடுக்கம் பதிவாகியுள்ளது. அங்கு நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து அந்தமானில் அடுத்தடுத்து 5 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்தமான் தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவில் 4.6 ஆகி நிலநடுக்கம் பதிவானது.
பின்னர் போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிலோமீட்டர் தொலையில் மீண்டும் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதையடுத்து கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. மீண்டும் அடுத்த 2 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இப்படி ஒரே நாளில் 5 முறை அந்தமான் அருகே நிலநடுக்கம் பதிவாகியுள்ளது அனைவரையும் பீதியடை வைத்துள்ளது. மேலும் 5 முறை நில நடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. அந்தமானில் 5 முறை நில நடுக்கம் ஏற்பட்டதால் அதன் அருகே இருக்கும் சென்னை உட்பட தமிழ்நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.