உலகம்

“தொடர்ந்து பொருளாதாரத் தடை விதித்தால்.. 500 டன் உங்கள் தலையில் விழும்” : அமெரிக்காவை மிரட்டும் ரஷ்யா!

விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ‘சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம்’ செயல்பட முடியாத நிலையில், அமெரிக்காவுக்கு அல்லது ஐரோப்பாவுக்கு மேல் விழலாம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

“தொடர்ந்து பொருளாதாரத் தடை விதித்தால்.. 500 டன் உங்கள் தலையில் விழும்” : அமெரிக்காவை மிரட்டும் ரஷ்யா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

குறிப்பாக, கடந்த 24ஆம் தேதி ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியது. ரஷ்ய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷ்ய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதை, ரஷ்ய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது.

அங்குள்ள விமான தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது.

ரஷ்யா போர் விமானங்கள் உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் போர் தொடங்கிய முதல் நாளிலேயே உக்ரைன் பெரும் அழிவைச் சந்தித்தது. ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதால் சேதம் அதிகமாகக் காணப்பட்டது. துல்லிய ஆயுதங்கள் மூலம் விமான தளங்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் அதிரடி தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்து விட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது.

இந்த போரால் உலக நாடுகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக தற்போது, விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ‘சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம்’ (International Space Station - ISS) செயல்பட முடியாத நிலையில், அமெரிக்காவுக்கு அல்லது ஐரோப்பாவுக்கு மேல் விழலாம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், ரஷ்ய விண்வெளி அமைப்பான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோசின் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “இந்த பொருளாதாரத் தடையால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சேவை செய்யும் ரஷ்யாவின் வின்வெளி தளங்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும்.

இதன்விளைவாக, விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை சரிசெய்ய உதவும் ரஷய பரிவு பாதிக்கப்படலாம். இதனால் 500 டன் கட்டமைப்புக் கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் கடல் அல்லது நிலத்தில் வந்து விழுந்துவிட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச வின்வெளி நிலையத்தின் (ISS) இயங்கு பொறிமுறையை ரஷ்யாவே வழிநடத்துகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் இதனை ஒரு ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories