உலகம்

“போன வாரம் கன்னத்தில் அறை.. இந்த வாரம் முட்டை வீச்சு” : அதிபருக்கு எதிராக கொந்தளிக்கும் பிரான்ஸ் மக்கள்!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மீது மர்ம நபர் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“போன வாரம் கன்னத்தில் அறை.. இந்த வாரம் முட்டை வீச்சு” : அதிபருக்கு எதிராக கொந்தளிக்கும் பிரான்ஸ் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெற்கு பிரான்ஸில் உள்ள லியோனில் சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற அதிபர் இமானுவேல் மேக்ரான் வந்திருந்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருந்த போது திடீரென ஒருவர் அவர் மீது முட்டையை வீசினார்.

இது அவரது தோல் மீது பட்டு கீழே விழுந்து உடைந்தது. இதனால் அவரின் பாதுகாவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் முட்டை வீசிய நபரை உடனே பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர். அப்போது அவர் நான் அதிபருடன் பேசவேண்டும் என கூறினார். ஆனால், அவரை பாதுகாவலர்கள் அங்கிருந்து உடனே அழைத்துச் சென்றனர்.

இப்படி அதிபர் இமானுவேல் மேக்ரான் மீது தாக்குதல் நடந்தது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் பொது நிகழ்வில் பங்கேற்றபோது அவரின் கன்னத்தில் ஒருவர் அறைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படித் தொடர்ந்து பொதுமக்கள் அதிபர் மீது தாக்குதல் நடத்தி வருவது அவர் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இன்றும் ஆறு மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories