உலகம்

“உலகளவில் உயிரிழந்தோர் 6.63 லட்சமாக உயர்வு” : கொரோனாவால் உலக நிலைமை படுமோசம் - அதிர்ச்சி தகவல்!

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 663,476 ஆக உயர்ந்துள்ளது.

“உலகளவில் உயிரிழந்தோர் 6.63 லட்சமாக உயர்வு” : கொரோனாவால் உலக நிலைமை படுமோசம் - அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 16,895,202 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 663,476 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 4,498,343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 152,320 பேர் பலியாகினர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், இந்தியா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது.

“உலகளவில் உயிரிழந்தோர் 6.63 லட்சமாக உயர்வு” : கொரோனாவால் உலக நிலைமை படுமோசம் - அதிர்ச்சி தகவல்!

அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1,532,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 34,224 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது முழுமையாக செய்துள்ளது ரஷ்யா. மேலும் இந்த சோதனை பாதுகாப்பானது என மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories