உலகம்

#INDvAUS உலகக்கோப்பை போட்டியை காண வந்த விஜய் மல்லையா!

இன்று நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண விஜய் மல்லையா ஓவல் மைதானத்துக்கு வந்துள்ளார்.

#INDvAUS உலகக்கோப்பை போட்டியை காண வந்த விஜய் மல்லையா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இங்கிலாந்தில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண, லண்டனில் வாழும் விஜய் மல்லையா ஓவல் மைதானத்துக்கு வந்துள்ளார்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா இந்திய பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் தொகை 9,000 கோடிக்கும் மேல் கட்டவில்லை என்று வங்கிகள் நெருக்கடி கொடுத்ததால் இந்தியாவிலிருந்து தப்பிச்சென்று தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார்.

கிரிக்கெட் பிரியரான இவர் ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணியை ஏலத்தில் எடுத்து அதன் உரிமையாளராகச் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தைக் காண வந்துள்ளார் விஜய் மல்லையா.

கிரிக்கெட் போட்டியைக் காண வந்த விஜய் மல்லையாவிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, ''நான் இங்கு கிரிக்கெட் பார்க்க வந்திருக்கிறேன்'' எனக் கூறி, பேட்டியை தவிர்த்துவிட்டுச் சென்றுள்ளார்.

banner

Related Stories

Related Stories