உலகம்

“அமெரிக்காவுடன் போரிட விரும்பினால், ஈரானுக்கு அழிவுதான் கதி” - மிரட்டும் ட்ரம்ப்

“ஈரான் எங்களுடன் போரிட விரும்பினால், ஈரான் அதோடு முடிந்து விடும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் மூலம் இருநாடுகளிடையே போர்ப்பதற்றம் உருவாகியுள்ளது.

“அமெரிக்காவுடன் போரிட விரும்பினால், ஈரானுக்கு அழிவுதான் கதி” - மிரட்டும் ட்ரம்ப்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஈரான் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்டது.

ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு விருப்பம் இல்லாததால், அமெரிக்கா நலன் இல்லை என திடீரென ஈரானுடன் ஆன ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக டிரம்ப் அறிவித்தார்.

இதன் மூலம் அமெரிக்கா ஈரான் நாட்டை நேரடியாக பிரச்சனைக்கு இழுத்துவிட்டது. மேலும் ஈரான் ராணுவ படையை கருப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. அதற்கு ஈரான் அமெரிக்கா ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்த சூழலில் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி உள்ளது. மேலும் ஈரான் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்ற நோக்கத்தில் படைகளை அனுப்பி வருவதாக அமெரிக்கா காரணம் கூறுகிறது. ஈரான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

“அமெரிக்காவுடன் போரிட விரும்பினால், ஈரானுக்கு அழிவுதான் கதி” - மிரட்டும் ட்ரம்ப்

இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் எர்பில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை, உடனடியாக நாடு திரும்பும்படி அமெரிக்கா மே 16ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்காவை நோக்கி திரும்பியதாக சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

விமானம் தாங்கி போர் கப்பல்களையும், தளவாடங்களையும் அமெரிக்கா தொடர்ந்து அனுப்பினால், அமெரிக்கா-ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் ஏற்படும் சூழல் உருவாகும் என்றும் மேலும் படைகளைக் குவித்து ஏவுகணைகளை வைத்து எங்களை மனரீதியாக பலவீனப்படுத்தவே அமெரிக்கா இத்தகைய நடவடிக்கையை எடுப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

“அமெரிக்காவுடன் போரிட விரும்பினால், ஈரானுக்கு அழிவுதான் கதி” - மிரட்டும் ட்ரம்ப்

இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவீட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது; "ஈரான் எங்களுடன் போரிட விரும்பினால், ஈரான் அதோடு முடிந்து விடும். அதுவே அந்நாட்டின் அதிகாரப்பூர்வ முடிவாக இருக்கும். அவர்கள் மீண்டும் அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories