உலகம்

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு !

குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் சிலாபம் நகரில் இருபிரிவினருக்கு இடையில் கலவரம் ஏற்பட்டதால் நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டரன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதனை அடுத்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தின் இந்த கோரத்தாண்டவத்தில் இருந்து மெல்ல மீண்டுவரும் இலங்கை மக்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமந்துள்ள கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று இருதரப்பினருக்கு இடையில் கலவரம் வெடித்ததால் நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories