வைரல்

நடுரோட்டில் போலிஸார் கன்னத்தில் பளார் பளாரென அறைந்த இளம் பெண்.. அதிர்ச்சி வீடியோ!

டெல்லியில் போலிஸார் கன்னத்தில் இளம் பெண் ஒருவர் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடுரோட்டில் போலிஸார் கன்னத்தில் பளார் பளாரென அறைந்த இளம் பெண்.. அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் போலிஸார் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த காரை ஒட்டி வந்த இளம் பெண் ஒருவர், காரை நிறுத்திய போலிஸாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவர் திடீரென போலிஸாரின் கன்னத்தில் அறைந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணைத் தடுத்தனர். இருந்தாலும் அவர் தொடர்ந்து போலிஸாரை தாக்க முற்பட்டார். பின்னர் அந்த போலிஸாரை அவர் திட்டிக் கொண்டே காரில் ஏறிச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இதுதொடர்பாக போலிஸார் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories