வைரல்

“அப்போ #தமிழ்நாடு.. இப்போ #GetOutRavi..” -தொடர்ந்து தாக்கப்படும் ஆளுநர்: இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் HASTAG

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இணையத்தில் #GetOutRavi ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

“அப்போ #தமிழ்நாடு.. இப்போ #GetOutRavi..” -தொடர்ந்து தாக்கப்படும் ஆளுநர்: இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் HASTAG
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடப்பாண்டின் (2023) முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். ஆர்.என்.ரவி தமிழில் பேசத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தமிழில் கூறினார்.

தொடர்ந்து அவர் தனது உரையை தொடங்கும்போதே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளை காட்டினர். மேலும் அவர்கள் “எங்கள் நாடு தமிழ்நாடு.. தமிழ்நாடு” என்றும், “தமிழ்நாடு வாழ்க..” என்றும் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து முழக்கம் எழுப்பியபோதும், ஆளுநர் தனது உரையை பேசிக்கொண்டே இருந்தார்.

“அப்போ #தமிழ்நாடு.. இப்போ #GetOutRavi..” -தொடர்ந்து தாக்கப்படும் ஆளுநர்: இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் HASTAG

இருப்பினும் தொடர்ந்து முழக்கத்தை எழுப்பிய அக்கட்சியினர், பின்னர் வெளிநடப்பு செய்ய எண்ணினர். அதன்படி அதிமுகவை தவிர காங்கிரஸ், மதிமுக, விசிக, த.வா.க., உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

“அப்போ #தமிழ்நாடு.. இப்போ #GetOutRavi..” -தொடர்ந்து தாக்கப்படும் ஆளுநர்: இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் HASTAG

இந்த நிலையில் தொடர்ந்து ஆளுநர் பேசி வந்தார். அப்போது அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பாக தயாரித்து கொடுக்கப்பட்ட உரையில் இருந்து முக்கிய 5 தலைவர்களின் பெயர்களை தவிர்த்தே பேசினார். அதாவது

"தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்" - ஆகிய 5 பெயர்களை ஆளுநர் தனது உரையில் இருந்து நீக்கி பேசியுள்ளார்.

மேலும் சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஒப்புதல், திராவிட மாடல் - ஆகிய 8 வார்த்தைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து வாசித்துள்ளார்.

“அப்போ #தமிழ்நாடு.. இப்போ #GetOutRavi..” -தொடர்ந்து தாக்கப்படும் ஆளுநர்: இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் HASTAG

ஆளுநரின் இந்த முகசுழிக்கும்படியான நடவடிக்கையை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார். அப்போது முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவை மரியாதை இல்லாமல் ஒரு எதிர்க்கட்சி போல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இதனால் தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தேசிய கீதம் பாடாமலும் வெளியே ஆளுநர் சென்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் வலுத்து வருகிறது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் இருந்து பல்வேறு கட்சிகள் தரப்பில் இருந்து கண்டனங்கள் கிளம்பியுள்ளது. மேலும் இதுவரை சட்டப்பேரவையையும், தேசிய கீதத்தையும் எந்த ஆளுநரும் அவமரியாதை செய்யவில்லை என்றும், இவரே இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டதாகவும் கண்டங்கள் வலுத்து வருகிறது.

“அப்போ #தமிழ்நாடு.. இப்போ #GetOutRavi..” -தொடர்ந்து தாக்கப்படும் ஆளுநர்: இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் HASTAG

தொடர்ந்து #GetOutRavi என்ற ஹேஷ்டாகும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதோடு ஆளுநர் ரவிக்கு நேராகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டை முன்வைத்தால் அதானை சந்திக்க இயலாத ஆளுநர், உடனே அந்த இடத்தை விட்டு நடையை கட்டியதால் ஆளுநரே தற்போது தமிழ்நாடு இணையவாசிகளுக்கு கன்டென்டாக மாறியுள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும்" என்று ஆளுநர் கூறியதற்கு பல்வேறு கண்டங்கள் கிளம்பியது. மேலும் ஆளுநருக்கு எதிராக #தமிழ்நாடு என்ற ஹேஷ்டாகும் ட்ரெண்ட் ஆனது. அதுவே இன்னும் ஓயாத நிலையில், தற்போது மீண்டும் ஆளுநருக்கு எதிராக #GetOutRavi, #தமிழ்நாடு என்று இரண்டு ஹேஷ்டாகுகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.

banner

Related Stories

Related Stories