வைரல்

என்னோட இறப்பு சான்றிதழைத் தொலைத்துவிட்டேன்: பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துத் தேடும் வித்தியாசமான நபர்!

என்டோட இறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டதாக விசித்திரமான செய்தித்தாள் விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்னோட இறப்பு சான்றிதழைத் தொலைத்துவிட்டேன்: பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துத் தேடும் வித்தியாசமான நபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாம் செய்தித்தாளில் திருமணம், காணவில்லை விளம்பரம் முதல் பொது மன்னிப்பு வரை பல விதமான விளம்பரங்களை பார்த்திருப்போம். ஆனால் தற்போது இணையத்தில் ஒரு விளம்பரம் வைரலாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த விளம்பரத்தில் தனது இறப்பு சான்றிதழைத் தவறுதலாகத் தொலைத்து விட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததே இணைய வாசிகளின் அதிர்ச்சிக்குக் காரணம்.

மேலும் அந்த விளம்பரத்தில் இறப்பு சான்றிதழ் தொலைந்த இடமும், தேசியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் விளம்பரத்தில் அச்சிடப்பட்ட பெயரில் ரஞ்சித் குமார் சக்கரவர்த்தி என்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, விளம்பரத்தைக் கொடுத்த நபரை நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். அதில் ஒருவர் "சான்றிதழ் கிடைத்தால் சொர்க்கமா அல்லது நரகத்திற்கு அனுப்பவா" என பதிவிட்டுள்ளார்.

என்னோட இறப்பு சான்றிதழைத் தொலைத்துவிட்டேன்: பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துத் தேடும் வித்தியாசமான நபர்!

இதேபோல் மற்றொருவர் "நான் ஆவிகளை நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். இப்படி பலர் கிண்டல் அடித்துப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இப்படி தவறாக விளம்பரம் வெளியிட்ட செய்தித்தாள் நிறுவனத்தையும் பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த விளம்பரம் எந்த செய்தி தாளில் வெளியானது, எந்த தேதியில் வெளியானது என்ற தகவல் தெரியவில்லை.

banner

Related Stories

Related Stories