வைரல்

போப்பாண்டவரிடம் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய வேந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா: சரித்திர நிகழ்வு!

போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல், ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய வேந்தர் தான் நமது பேரறிஞர் அண்ணா அவர்கள்.

போப்பாண்டவரிடம் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய வேந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா: சரித்திர நிகழ்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்கா சென்ற போது, ரோமுக்கும் சென்ற, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கு, வாடிகன் நகரில், உலகக்கிறித்துவத் தலைவர் போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது!!

தமிழக மக்கள் அனைவராலும் பேரறிஞர் அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும், “காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை அவர்கள்” தமிழ் நாட்டின்ஆறாவது தலைமை அமைச்சர் ஆவார்கள். இந்திய ஒன்றியத்தில் மக்களாட்சி மலர்ந்த பிறகு மாநிலங்கள் அளவில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி அல்லாத முதலாவது திராவிட கட்சித் தலைவர் ஆவார் !!.

மகாத்மா காந்தி பிறந்த, இந்திய ஒன்றியத்தின், கடைக்கோடி மாநிலம் தமிழ்நாட்டின் முதல்வர் நான் என்று.., பேச ஆரம்பித்து, தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள்!

போப்பாண்டவர் சொன்னார்.. அருமையாகப் பேசுகிறீர்கள் . தொடர்ந்து பேசுங்கள். தொடர்ந்து பேரறிஞர் அண்ணா அவர்கள் ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் ... சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் ? கேளுங்கள் என்றார் .

போப்பாண்டவரிடம் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய வேந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா: சரித்திர நிகழ்வு!

என்ன கேட்டாலும் தருவீர்களா.? என்று கேட்டார் பேரறிஞர் அண்ணா அவர்கள். கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர். போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய, “மோகன் ரானடே” இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறித்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் பேரறிஞர் அண்ணா அவர்கள். சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட, மோகன் ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

டெல்லி வந்த மோகன் ரானடேவை வரவேற்க அன்றைய இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் அன்னை இந்திரா காந்தி அவர்கள் விமான நிலையத்திற்குச் சென்றார். மோகன் ரானடே, ஒன்றிய தலைமை அமைச்சர் அன்னை இந்திரா காந்தி அவர்களிடம், யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு. அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.

அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் தலைமை அமைச்சர் மாண்புமிகு அன்னை இந்திரா அவர்கள். நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் அன்னை இந்திரா காந்தி அவர்கள்.

உடைந்து போன மோகன் ரானடே, நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். தலைமை அமைச்சர் மாண்புமிகு அன்னை இந்திரா, மோகன் ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்ட மோகன் ரானடே , தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார் என்பது தமிழினம் மறந்த வரலாறு. போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல்.., ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய வேந்தர் தான் நமது பேரறிஞர் அண்ணா அவர்கள்.

banner

Related Stories

Related Stories