வைரல்

“கைதுக்கு பயப்படவில்லை, நானே சரணடைவேன்” தலைமறைவான சுயேச்சை எம்.எல்.ஏ-வின் பகீர் வீடியோ!

பீகார் சுயேச்சை எம்.எல்.ஏ ஆனந்த் சிங் வீட்டில் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சரணடைவதற்கு இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என போலிஸாருக்கு வீடியோ வெளியிட்டுள்ளார்.

“கைதுக்கு பயப்படவில்லை, நானே சரணடைவேன்” தலைமறைவான சுயேச்சை எம்.எல்.ஏ-வின் பகீர் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பீகாரைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ ஆனந்த் சிங். இவர் ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சையாக போட்யிட்டு மொகாமா தொகுதியில் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ ஆன பிறகும் இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் போடப்படுட்டுள்ளது.

முன்னதாக மொகாமா பகுதியைச் சேர்ந்த காண்ட்ராக்டர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆனந்த் சிங் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்குகாக குரல் மாதிரியை அளிக்கும்படி பீகார் போலீசார் சம்மன் அனுப்பிருந்தார்கள். சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள இவரது பண்ணை வீட்டில் கடந்தவாரம் போலிஸார் திடீரென சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த வீட்டில், ஏகே-47 துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் இரண்டு கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து பாட்னாவில் உள்ள அவரது வீட்டிலும் போலிஸார் சோதனை நடத்தினார்கள். அந்த வீட்டிலும் கத்தி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அனுமதியில்லாமல் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்தின் கீழ் இவர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவலறிந்த ஆனந்த் சிங் ஒருவாரமாக தலைமறைவானார். அவரை போலிஸார் தேடி வரும் நிலையில் வீடியோ ஒன்றை ஆனந்த் சிங் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “நான் கைது நடவடிக்கைக்கு பயப்படவில்லை. இன்னும் 3 அல்லது 4 நாட்களில் நானே நீதிமன்றத்தில் சரணடைவேன். அதற்கு முன்பு எனது வீட்டில் பத்திரிக்கையாளரை சந்திப்பேன்” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ செய்தி போலிஸாரை அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories