வைரல்

“இஸ்லாமியர்கள் 50 மனைவிகளை மணமுடித்து, 1050 குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள்” - பாஜக MLAவின் விஷம பேச்சு!

“இஸ்லாமியர்கள் 50 மனைவிகளை மணமுடித்து 1050 குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள்” என்று என பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக சுரேந்திரா சிங் பேசியுள்ளார். இது சமூக வலைதளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இஸ்லாமியர்கள் 50 மனைவிகளை மணமுடித்து, 1050 குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள்” - பாஜக MLAவின் விஷம பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்துள்ளது. பாஜகவின் தலைமை பீடமாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார அமைப்புகள் இஸ்லாமிய மக்கள் மீதான வன்மத்தை நாளுக்கு நாள் தொடுத்து வருகிறது.

பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தை சர்வசாதாரணாமாக பேசி வருகிறார்கள். இதனை பா.ஜ.க தலைமை கண்டிக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர், சுரேந்திரா சிங், இவர் பேச தொடங்கினாலே இஸ்லாமிய விரோத வெறுப்புகளை தான் கொட்டித்தீர்ப்பார். அந்தவகையில் மீண்டும் இஸ்லாமி மக்கள் மீது வன்மத்தை விதைத்துள்ளார்.

சமீபத்தில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியள்ளது. அந்த வீடியோவில் பா.ஜ.க எம்.எல்.ஏ பேசியதாவது, “இஸ்லாமியர்கள் 50 மனைவிகளை மணமுடித்து, 1050 குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள்” என்றும், “இது பாரம்பரியம் அல்ல, மிருகத்தனமான செயல்” என்றும் தனது வக்கிரத்தை வார்த்தை வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.

அதேப்போல், “2024-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் துவங்கப்பட்டு 100ஆண்டுகள் நிறைவடை கின்றது, அந்த ஆண்டில் இந்தியா இந்து ராஷ்ட்ராவாக அறிவிக்கப்படும்” என்றும், மற்றொரு வீடியோவில் சுரேந்திரா சிங், “மேற்கு வங்க மாநிலம் இலங்கை போன்றது, ராமரைப் போன்று தாங்கள் ஏற்கெனவே, பாதி மேற்கு வங்கத்தை சிதைத்துவிட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தல் முடிவின்போது மீதமுள்ள மேற்கு வங்கமும் சிதைக்கப்படும்” என்றும் ஆணவமாக பேசியுள்ளார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திரா சிங்-ன் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும், மேலும் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசிய அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சிறுபான்மையினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories