ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர் மான்ஸ்ட் நகரத்துக்கு சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக விமானநிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க முற்பட்ட போது ரன்-வேயில் திடீரென்று அதன் பின்புறம் தீப்பிடித்துள்ளது. இந்த விமானத்தில் 73 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 78 பேர் பயணம் செய்துள்ளனர்.
தீப்பிடித்து எரிந்துகொண்டு இருக்கும் நிலையில் தீயணைப்பு வீரர்கள் 37 பேரை உடனடியாக மீட்டுள்ளனர். இந்த விபத்தில் 41 பேர் பலியானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் 11 பேர் தீக்காயங்களுடன் மீட்டுள்ளார். மேலும் விபத்தின் போது பயணி ஒருவர் விமானம் தீ பிடித்து எரிவதை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் பலியான குடும்பத்தினர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கலை தெரிவித்துள்ளார்.