வைரல்

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்கி அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

இதன் எதிரொலியாக சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை முழுவதும் சமுக வலைதளங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் 8 நாட்களுக்கு பிறகு இலங்கையில் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories