வைரல்

அதிகாரப்பூர்வமற்ற வாட்ஸ்ஆப் செயலிகள் தடை - வாட்ஸப் அதிரடி 

அதிகாரப்பூர்வமற்ற வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தவர்களின் கணக்கு உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட விபரங்களும் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

whatsapp
google whatsapp
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அதிகாரப்பூர்வமற்ற வகையில் வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தவர்களின் கணக்கு உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட விபரங்களும் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் செயலி உலகளவில் பல பில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை அதிகாரப்பூர்வமான வகையில் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.எனினும், சிலர் மூன்றாம் நிலை செயலிகளை வைத்து வாட்ஸ்அப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இப்படி தகவல் பயன்பாட்டு செயலிகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.இது வரை சாதாரணமாக எச்சரித்து வந்த வாட்ஸ்அப் இப்போது கடுமையாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி போலியான செயலிகளைப் பயன்படுத்தி வருபவர்களைத் தற்காலிகமாகத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறது.

இந்த போலியான செயலிகளால் தனிநபர் தொடர்பான தகவல்கள் திருடப்படலாம். அவருடைய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட பிற விவரங்களை மூன்றாம் நபர் யாருவேண்டுமானாலும் கையாளலாம். இதன் காரணமாக வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதன்படி, மூன்றாம் நிலை செயலி மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்தவர்களின் கணக்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அப்படி தடை செய்யப்பட்டவர்களுக்கு அவர்களது மொபைல் எண் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டதற்கான செய்தி போலி செயலியில் காட்டப்படுகிறது.

‘மேலும் உதவி தேவை என்றால் எங்களைத் தொடர்புகொள்ளவும்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக அவர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பை போலி செயலியில் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. அதேநேரம் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் செயலியை இன்ஸ்டால் செய்து அதே மொபைல் எண்ணில் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கலாம். போலியான செயலிகளைப் பயன்படுத்துவதன் மூலமாகத் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதால் வாட்ஸ்அப் இந்த முடிவை எடுத்திருக்கிறது. எனினும், அவர்களுடைய முந்தைய விவரங்கள் மீட்கப்படுமா என்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வாட்ஸ் ஆப் வெளியிடவில்லை.

வாட்ஸ் அப் பயன்பாட்டில் மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வாட்ஸ் அப் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கைவிரல் மூலம் வாட்ஸ் அப்பை லாக் செய்யும் வசதி போன்றவை மேம்படுத்தப்படவுள்ளது.

banner

Related Stories

Related Stories