Videos

“எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட சமையல்காரர்..” : வைரல் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி ! (வீடியோ)

உத்தர பிரதேச மாநிலத்தில் உணவகம் ஒன்றில், ஊழியர் ஒருவர் சப்பாத்தியில் எச்சில் துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட சமையல்காரர்..” : வைரல் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி ! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேச மாநிலம் நகர் கோட்வாலி பகுதியில் சிக்கன் பாயிண்ட் என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் உள்ள தமீசுத்தீன் என்பர் தந்தூரி ரொட்டி சுடுவது அவரது வேலையாக இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தந்தூரி ரொட்டி சுடும் போது சப்பாத்தி மாவில் எச்சிலை துப்பி பின்னர் அதை அடுப்பில் வைத்து சூடுபடுத்தியுள்ளார். இதனைக் கடைக்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் பார்த்து வீடியோவும் எடுத்து சமூக வலைதளத்தில் உணவகத்தின் மீதும் சமையல்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பகீர்ந்திருந்தார்.

இதனையடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் கண்டத்திற்கு உள்ளானது. இதனையடுத்து இதுதொடர்பாக வந்த புகாரை அடுத்து உணவகத்திற்குச் சென்று சமையல்காரரை அழைத்துச் சென்று விசாரித்து வருகிறனர். மேலும் உணவக உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories