தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல்? : சபாநாயகர் அப்பாவு சொன்ன தகவல்!

தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்.17 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல்? : சபாநாயகர் அப்பாவு சொன்ன தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 2026 பிப்.17 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை பிப்.17 ஆம் தேதி கூடுகிறது. அன்றே 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை அவையில் வாசிப்பார். பிப்.20 ஆம் தேதி 2025-26-க்கான கூடுதல் செலவுக்கான மாணிய கோரிக்கை அளிக்கப்படும்.

மேலும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்களுக்கு நடக்கும்” என அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

2026-ல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது தேர்தலுக்கு முந்தைய இடைக்கால நிதிநிலை அறிக்கையாக அமையும்.

banner

Related Stories

Related Stories