தமிழ்நாடு

புதுடெல்லியில் நடைபெறும் தமிழ்நாடு நாள்... 44-வது பொருட்காட்சி.. தொடங்கி வைத்தார் அமைச்சர் சாமிநாதன்!

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேற்று 44-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2025 புதுடெல்லியில் நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

புதுடெல்லியில் நடைபெறும் தமிழ்நாடு நாள்... 44-வது பொருட்காட்சி.. தொடங்கி வைத்தார் அமைச்சர் சாமிநாதன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுடெல்லியில் நடைபெறும் 44-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2025 பிரகதி மைதானத்தில் உள்ள “Amphee” கலையரங்கில் நேற்று (15.11.2025) நடைபெற்ற “தமிழ்நாடு நாள் விழா”வை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்கள்.

புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், ஆண்டுதோறும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியானது நவம்பர் 14 ஆம் தேதி முதல்  27 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டு (2025) நடைபெறும் 44-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியினை 14.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று ஒன்றிய வணிகம் மற்றும் தொழில் அமைச்சக இணையமைச்சர் ஜித்தின் பிரசாதா அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

புதுடெல்லியில் நடைபெறும் தமிழ்நாடு நாள்... 44-வது பொருட்காட்சி.. தொடங்கி வைத்தார் அமைச்சர் சாமிநாதன்!

இப்பொருட்காட்சியில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள், இந்திய யூனியன் பிரதேசங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்று தங்களது அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள், கொள்கைகள் போன்றவற்றை காட்சிப்படுத்தியும், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது நாட்டில் தயாரிக்கப்படும் முக்கியப் பொருட்களை சந்தைப்படுத்தியும் வருகின்றன. 

நடப்பாண்டில், இப்பொருட்காட்சிக்கான கருப்பொருள் “Ek Bharat, Shreshtha Bharat” (ஒரே பாரதம், உன்னத பாரதம்) ஆகும். "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்பது இந்தியாவின் தேசிய ஒற்றுமையையும், பல்வேறு பண்பாடுகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தையும் கொண்ட ஒரு திட்டமாகும்.

புதுடெல்லியில் நடைபெறும் தமிழ்நாடு நாள்... 44-வது பொருட்காட்சி.. தொடங்கி வைத்தார் அமைச்சர் சாமிநாதன்!

இக்கண்காட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, தொழில் துறை,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, சுற்றுலாத்துறை, பூம்புகார்,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், கோ-ஆப்டெக்ஸ், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழ்நாடு அரசின் மகத்தானத் திட்டங்கள் குறித்தும் அரசின் சாதனைகளை குறித்த புகைப்படங்கள் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன.  

புதுடெல்லியில் நடைபெறும் தமிழ்நாடு நாள்... 44-வது பொருட்காட்சி.. தொடங்கி வைத்தார் அமைச்சர் சாமிநாதன்!

இந்த கண்காட்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது :-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படியும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து பொது மக்கள் பார்வைக்காக  கைத்தறி துறை, தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகம், குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்தும் வேளாண்மை துறை சார்பில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்த அரங்குகள் இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சி இடம் பெற்றிருக்கின்றன.

தமிழ்நாடு நாள் விழாவில் தமிழ்நாட்டின் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.  இந்த பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சியில் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரங்கிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டும் சிறப்பு பரிசு கிடைக்கும் என்ற வகையில் இந்த அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தேசிய அளவில் சந்தைப்படுத்துவதற்கு இந்த பன்னாட்டு பொருட்காட்சி ஒரு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

புதுடெல்லியில் நடைபெறும் தமிழ்நாடு நாள்... 44-வது பொருட்காட்சி.. தொடங்கி வைத்தார் அமைச்சர் சாமிநாதன்!

மேலும், இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியில் பங்கேற்கும் அனைத்து மாநிலங்களும், தங்களது மாநில நாள் விழாவினை சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு நாள் விழா இன்று (15.11.2025) பிரகதி மைதானத்தில் உள்ள “Amphee” கலையரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழாவினை, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.இ.பிரகாஷ், கே.ஈஸ்வரசாமி ஆகியோர்,  உள்ளுரை ஆணையர் ஆஷிஷ் குமார் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர்/இணைச் செயலாளர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் கு.தமிழ் செல்வராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின் சார்பில்,  தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் டெல்லியில் வசிக்கும் தமிழர்கள் உட்பட, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

banner

Related Stories

Related Stories