தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழகத்துக்காக 20 Multi Axle பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக திறந்த வெளி ஒப்பந்தம் பெங்ளூரில் அமைந்துள்ள Volvo நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று, கூண்டு கட்டும் பணியினையும், உள் கட்டமைப்பு வசதிகளையும், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பேருந்தினை இயக்கி சோதனை நடத்தினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு நடப்பு நிதிஆண்டு 2025-2026-ல், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 130 புதிய பேருந்துகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்துள்ளது. அவற்றில் 110 குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளும், 20 Multi Axle சொகுசு பேருந்துகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி 20 Multi Axle பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக திறந்த வெளி ஒப்பந்தம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பெங்ளூரில் அமைந்துள்ள Volvo நிறுவனத்தில், கூண்டு கட்டும் பணியினையும், உள் கட்டமைப்பு வசதிகளையும், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்ஆய்வின் போது Multi Axle சொகுசு பேருந்தினை இயக்குவதற்காக பயிற்சி பெற்று வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது மேற்படி நிறுவனத்தின் பயிற்சி ஓடுதளத்தில் பேருந்தினை சோதனை முறையில் இயக்கி பார்த்தார்.