தமிழ்நாடு

15 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கவுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... விவரம் உள்ளே !

15 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கவுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கவுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை விவரம் :

புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்:-

1)திருமதி க.த. பூரணி,

காவல் துணை கண்காணிப்பாளர்

சைபர் கிரைம் செல் பிரிவு,

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை,

சென்னை.

2)திருமதி பி. உலகராணி,

காவல் ஆய்வாளர்,

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை,

திருநெல்வேலி.

3)திருமதி மா.லதா,

காவல் ஆய்வாளர்,

கடத்தல் தடுப்பு பிரிவு,

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,

சென்னை.

4)திரு. மு.செந்தில்குமார்,

காவல் ஆய்வாளர்,

மகுடஞ்சாவடி காவல் நிலையம்,

சேலம் மாவட்டம்.

5)திருமதி ஜெ.கல்பனாதத்,

துணைக் காவல் கண்காணிப்பாளர்,

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,

தஞ்சாவூர்.

6)திருமதி வே.சந்தானலெட்சுமி,

காவல் ஆய்வாளர்,

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை,

திண்டுக்கல்.

7)திரு. மா.வசந்தகுமார்,

காவல் ஆய்வாளர்,

பெருமாநல்லூர் காவல் நிலையம்,

திருப்பூர் மாவட்டம்.

8)திரு. வெ.ஜெகநாதன்,

காவல் ஆய்வாளர்,

வடக்கு காவல் நிலையம்,

திருப்பூர் மாநகரம்.

9)திருமதி கோ.திலகாதேவி,

காவல் ஆய்வாளர்,

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,

அரியலூர்.

10)திருமதி இரா.புவனேஸ்வரி,

காவல் ஆய்வாளர்,

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,

நாகப்பட்டினம்.

15 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கவுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... விவரம் உள்ளே !

இதே போன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல் துறை அதிகாரிகளுக்கு 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க

தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்:-

1)முனைவர். மஹேஷ்வர் தயாள், இ.கா.ப.,

கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும்

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர், சென்னை.

2)திரு. ஜெ. மகேஷ்,

காவல் துறைத் துணைத் தலைவர்,

நுண்ணறிவு (உள்நாட்டுப் பாதுகாப்பு), சென்னை.

3)திரு. நை. சிலம்பரசன்,

காவல் கண்காணிப்பாளர்,

திருநெல்வேலி மாவட்டம்.

4)திரு. கு. பிரவின் குமார்,

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,

தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை,

தலைமையகம், சென்னை.

5)திருமதி தா.மேரிரஜு

காவல் ஆய்வாளர்,

சென்னை பெருநகர காவல்துறை

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்.

banner

Related Stories

Related Stories