தமிழ்நாடு

“கொடநாடு என்றவுடன் ஏன் தொடை நடுங்குகிறது?” - பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புகொண்டவர்களை காப்பாற்ற பழனிசாமி மேற்கொண்ட பித்தலாட்டங்களுக்கும் அளவில்லை; மூடி மறைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கும் கணக்கில்லை என அமைச்சர் ரகுபதி அறிக்கை

“கொடநாடு என்றவுடன் ஏன் தொடை நடுங்குகிறது?” - பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2019-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். மேலும் இந்த வன்கொடுமை தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இதனை கண்டுகொள்ளாமல் இருந்த அதிமுக அரசு, பின்னர் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொடுத்த தொடர் அழுத்தத்தில் வழக்குப்பதிவு செய்தது.

அப்போது இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட 9 பேர் குற்றவாளிகளாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்களை காப்பாற்றும் முனைப்பிலேயே அப்போதைய அதிமுக அரசு செயல்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 9 பேரையும் குற்றவாளி என்று நேற்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குள் ரூ.85 லட்சம் நிவாரணமாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நீதிக்காக போராடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“கொடநாடு என்றவுடன் ஏன் தொடை நடுங்குகிறது?” - பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி!

இதைத்தொடர்ந்து இன்று நீலகிரியில் பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "விரைவில் கொடநாடு வழக்கிலும் நீதியை நிலைநாட்டுவோம்" என்றார். இதனால் பயந்துபோன பழனிசாமி பொள்ளாச்சி வழக்குக்கும் திமுகவுக்கும் என்ன சம்மந்தம் என்றும், முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசினார்.

இந்த நிலையில் இதற்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தற்போது கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை வருமாறு :

பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு கிடைத்ததற்கு, வெட்கமே இல்லாமல் தான்தான் காரணம் என்று பெருமை பேசுகிறார் பழனிசாமி. உண்மையில் வழக்குக்கூட பதிவு செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடித்ததுதான் பழனிசாமி செய்த கேவலமான சாதனை.

அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இந்த வழக்கில் தொடர்புகொண்டுள்ளார்கள் என்று அறிந்தவுடன், அவர்களைக் காப்பாற்ற பழனிசாமி மேற்கொண்ட பித்தலாட்டங்களுக்கும் அளவில்லை; மூடி மறைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கும் கணக்கில்லை! அப்பொழுது திமுகவும் இதர எதிர்க்கட்சிகளும் நடத்தியப் போராட்டங்களின் விளைவாகத்தான் வேறு வழியின்றி பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதனை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

“கொடநாடு என்றவுடன் ஏன் தொடை நடுங்குகிறது?” - பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி!

இந்தப் பித்தாலாட்டத்தை இன்று முதலமைச்சர் சுட்டிக் காட்டி பேசியதும் ஓடோடி வந்து அவதூறுகளை அள்ளி வீசி சென்றிருக்கிறார் பித்தலாட்டக்கார பழனிசாமி!

பொள்ளாச்சி வழக்கில் இன்று கிடைத்திருக்கிற தீர்ப்புக்கு, திமுகவுக்கு என்ன பங்கு உள்ளது என கேட்கிறார் பழனிசாமி. திமுக தலைவர் இப்பிரச்னையை கையில் எடுத்திருக்காவிட்டால் 2021 வரை இந்த லீலைகளை அதிமுக நிர்வாகிகள் நடத்தி இருப்பார்கள். இன்னும் ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இந்த தீர்ப்புக்கு திமுக காட்டிய உறுதிப்பாடும் போராட்டங்களும்தான் காரணம் என்பது தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரைத் தாக்கியது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்டு அச்சுறுத்தியது என பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியதுதான் பொள்ளாச்சி வழக்கில் பழனிசாமி ஆட்சியின் சாதனை. இன்றைக்கு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்கூட பிறழ் சாட்சியமாக மாறாமல் இருந்திருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் முதலமைச்சர் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கிற பாதுகாப்பான சூழலும், குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனும் நம்பிக்கையும்தான் காரணம்.

யார் அந்த சார்? என அருவருப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு தோற்றுப் போன பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றமே பாராட்டியது என்பதை அறிவாரா?

பழனிசாமியின் பதட்டத்திற்குக் கொடநாடு கொலை வழக்குப் பற்றி முதலமைச்சர் பேசியிருப்பதுதான் காரணம். தனது கட்சியின் தலைவர் வாழ்ந்த வீட்டையே பாதுகாக்க முடியாமல் அவல ஆட்சி நடத்திய பழனிசாமிக்குக் கொடநாடு என்றவுடன் ஏன் தொடை நடுங்குகிறது?

“கொடநாடு என்றவுடன் ஏன் தொடை நடுங்குகிறது?” - பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி!

டெல்லியில் பதுங்கிப் பதுங்கி அமித்ஷாவைச் சந்தித்த பழனிசாமி, எதற்காக சந்தித்தார் என்பது பச்சைக் குழந்தைக்கும் தெரியும். அதனை அறியாமல் பச்சைப் பொய்களை அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார் பழனிசாமி!

நூறுநாள் வேலைத்திட்டம், மெட்ரோ திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டி ஒன்றிய அரசுக்குக் கடிதம் வாயிலாகவும், நேரிலும், நாடாளுமன்றத்தின் வாயிலாகவும் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது தமிழ்நாடு அரசு, மக்களைத் திரட்டிப் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியது திமுக. ஆனால் தனது சந்திப்பால்தான் நிதி கிடைத்தது என கூசாமல் ‘Cringe’ செய்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி!

அமித்ஷாவைப் பார்க்கப் போகிறேன் என்பதைச் சொல்லக்கூட திராணி இல்லாமல், டெல்லியில் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னாரே கோழைசாமி, அதுதான் Original பித்தலாட்டம்!

ஒன்றிய அரசின் ரெய்டு நடவடிக்கையால், தனக்கோ தன் மகனுக்கோ சம்மந்திக்கோ பாதிப்பு வந்துவிடக்கூடாது. பணம், சொத்துக்கள் முடக்கப்பட்டு விடக்கூடாது என்ற பயத்தில்தான் பாஜகவோடு கூட்டணி வைத்தார். தனது பணத்தை காப்பாற்றிக்கொள்ள போராடிய பழனிசாமி, தமிழ்நாட்டுக்கு நிதியை வாங்கி கொடுத்தார் என்றால் பழனிசாமியின் பேரன்கூட நம்பமாட்டான்.

திமுக மக்களிடம் பெற்றிருக்கும் பேராதரவால் தன்னிலை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் மனம்போன போக்கில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.

இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து தனது கட்சியையே டெல்லியில் அடகு வைத்துவிட்டு வந்த எடுபுடி பழனிசாமிக்கு, மாநில உணர்வு என்று சொல்லுவதற்குத் தகுதி இல்லை. பழனிசாமியின் இந்தக் கபட நாடகங்கள் எந்தக் காலத்திலும் மக்களிடம் வெற்றிபெறப் போவதில்லை. படுதோல்வி பழனிசாமி எனும் அடையாளம் மாறப் போவதுமில்லை.

banner

Related Stories

Related Stories