தமிழ்நாடு

தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 6,049 பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணம்- TNSTC அறிவிப்பு!

தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 6,049 பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணம்- TNSTC அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பு ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் சிரமமின்றி பயணிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இவ்வாறு இயக்கப்பட்ட பேருந்துகளில் ,32,695 பயணிகள் பயணித்துள்ளனர் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பு முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (12.04‌.2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படியும் மற்றும் இன்று (13.04‌.2025) அதிகாலை 02.00 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும் 1,153 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,245 பேருந்துகளில் 1,78,475 பயணிகள் பயணம் செய்தனர். "

11‌.04.2025 அன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகள் 2,092 மற்றும் 712 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 1,54,220 பயணிகள் பயணம் செய்தனர்.ஆக கடந்த 11.04.2025 முதல் இன்று (13.04.2025) அதிகாலை 02.00 மணி வரை 6,049 பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனர்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories