தமிழ்நாடு

1.47 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - 67% விநியோகம் - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

1.47 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - 67% விநியோகம் - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு துவக்கிவைக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் 11.01.2025 வரை 67 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தகவல்.

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அநாத் வகையில் நடப்பாண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு நியாய விலை கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்காக அரசு ரூ.250 கோடியை ஒதுக்கியுள்ளது. பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி - சேலைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜன.09-ம் தேதி பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்த பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று வரை (ஜன.11) 67% விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

1.47 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - 67% விநியோகம் - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு வருமாறு :

”தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும்” எனவும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என அறிவித்தார்கள்.

1.47 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - 67% விநியோகம் - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

அதன்படி, கடந்த 09.01.2025 அன்று சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சின்னமலை வேளச்சேரி பிரதான சாலையில் இயங்கிவரும் சைதாப்பேட்டை-11 நியாயவிலைக் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாயவிலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50,000 கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, 11.01.2025 வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 47 லட்சத்து 07 ஆயிரத்து 584 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

banner

Related Stories

Related Stories