நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை ஒருநாள் கூட அவை முழுமையாக நடைபெறவில்லை.
இந்தியா கூட்டணி கட்சிகள் மணிப்பூர் வன்முறை, அதானி ஊழல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கை மீது விவாதம் நடத்த மறுத்து ஒன்றிய பா.ஜ.க அரசு அவையை தினமும் ஒத்திவைத்து வருகிறது.
மேலும் அவை ஒத்திவைப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள்தான காரணம் என பழிசுமத்தி வருகிறது. இது ஒருபுறம் என்றால், பிரதமர் மோடி அவைக்கே வராமல் இப்பிரச்சனைகளை வேடிக்கைப்பார்த்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக அவையில் ஆக்கப்பூர்வான விவாதங்கள், கேள்விகள் வரும்போதும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்குள் இருக்கமாட்டார். தற்போது மூன்றாவத முறையாக பிரதமாரக வந்தபிறகும் இதேவேலையைதான் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ள பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியை நான் அவையில் பார்க்கவே இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து கூறிய பிரியங்கா காந்தி,”அதானி விவகாரத்தை முன்மொழிந்தாலே, ஒன்றிய பா.ஜ.க அரசு அச்சப்படுகிறது. நான் நாடாளுமன்றத்தில் புதிய உறுப்பினராக பதவியேற்றது முதல், இதுவரை பிரதமர் மோடியை அவையில் பார்க்கவில்லை. இதை ஏன் நாங்கள் சிக்கலாக எழுப்பக்கூடாது?.” என கேள்வி எழுப்பியுள்ளார்.